பயிற்சி டாக்டர்கள் போராட்டம்

சென்னை அரசு ராஜாஜி மருத்துவமனையில் டாக்டர்கள் நடத்திய போராட்டத்தால் நோயாளி ஒருவர் பலியானதாக கூறப்படுகிறது. சென்னை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த சுதாகர் என்பவர் பலியானதாகவும், சிகிச்சை தர மறுத்ததாக டாக்டர்கள் மீது மாணவர்களின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.  நோயாளி யாரும் இறக்க வில்லை என மருத்துவமனை டீன் நாராயணசாமி விளக்கம் அளித்துள்ளார்.  டாக்டர்கள் சாலையில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மருத்துவமனையில் லஞ்சங்கள் வாங்கப்படுவதாக புகார் கூறி நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் பயிற்சி மருத்துவர் பத்திரிக்கையாளர்களை தாக்கியதாக கூறி பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.