ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுசூதனன் போட்டி

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுவார் என தெரிவித்துள்ளனர்.  ஜெ., மறைவையொட்டி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நாங்கள் வேட்பாளரை நிறுத்துவோம் என அதிமுக ஓ.பி.எஸ்., அணி அறிவித்தது. இது தொடர்பாக சென்னையில், வேட்பாளரை தேர்வு செய்ய ஆட்சி மன்ற குழுக்கூட்டம் நடந்தது.  ஓ.பி.எஸ்., மாபா, செம்மலை, முனுசாமி, உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மதுசூதனன் போட்டியிட வைப்பது என முடிவு எடுக்கப்பட்டது. இதனை ஓ.பி.எஸ்., நிருபர்களிடம் தெரிவித்தார். 1991இல் மதுசூதனன் ஆர்.கே.,நகரில் எம்.எல்.ஏ.,வாக இருந்தார். இப்பகுதி மக்கள் மத்தியில் பரிட்சயமான அவர் நிருபர்களிடம் பேசுகையில்: நான் இரட்டைஇலை சின்னத்தில் தினகரனை அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன். நானே வெற்றி பெறுவேன் என்றார்.