கோவில்பட்டியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்

கோவில்பட்டியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு வந்த தகவலை தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மார்க்கெட் ரோடு, மெயின் ரோடு, கடலைக்காரத் தெரு உள்ளிட்ட பகுதியில் சோதனை நடத்தினர். இதில் மெயின் ரோட்டில் உள்ள கடை ஒன்றில் தடைசெய்யப்பட்ட புகையிலை, பான்மசாலா பொருள்கள் பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 10 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருள்களை உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.