கமல்ஹாசனுக்கு அரசியல் தெரியாது – முதலமைச்சர் பேட்டி

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது, ஜெயலலிதாவின் லட்சியத்தை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். கமல்ஹாசனுக்கு அரசியல் தெரியாது. அவர் நடித்துக் கொண்டு இருக்கிறார். கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தபின்பு கருத்து தெரிவித்தால் நாங்கள் பதில் சொல்வோம். ஜெயலலிதா நினைவு மண்டபம் மக்கள் அனைவரும் பாராட்டும் வகையில் கட்டப்படும். இன்னும் இரு அணிகள் இணைப்பிற்கு வாய்ப்பு உள்ளது என நம்புகிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.