தமிழகத்தில் பொறியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டது

தமிழகத்தில் பொறியல் படிப்பிற்கான ரேண்டம் எண் அண்ணா பல்கலை கழகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உயர்கல்வி முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் ரேண்டம் எண் வெளியிட்டார். அண்ணா பல்கலை கழக இணையதளத்தில் ரேண்டம் என்னை பார்த்துக்கொள்ளலாம். ரேண்டம் எண் என்பது கணினிமூலம் ஓதுக்கப்படும் 16 டிஜிட் இலக்கு கொண்டதாக்கும். கட் ஆப் மற்றும் பிறந்த தேதி ஒரே மாதிரியாக இருந்தால் ரேண்டம் எண் மூலம் முன்னுரிமை அளிக்கப்படும். 

கலந்தாய்வில் பங்கேற்க 1.40 லட்சம் பேர் அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்துள்ளனர். இன்று ரேண்டம் எண் வெளியிடை தொடர்ந்த நாளை மறுநாள் 22ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 27ஆம் தேதி தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.