மாட்டிறைச்சி தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்விக்கு முதல்வர் பதில்

இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதற்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வர் பழனிசாமி கூறுகையில்,

தமிழகத்தில் பசுவதைத் தடைச்சட்டம் 40 ஆண்டு காலமாக அமலில் உள்ளது. பெரும்பான்மையான மக்கள் மாட்டிறைச்சி விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு செயல்படும். நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரே தமிழக அரசு முடிவெடுக்கும் என என்று முதல்வர் தெரிவித்தார்.