இந்திய ராணுவம் எதற்கும் தயார் – ராணுவ தளபதி பிபின் அதிரடி

சீனா, பாகிஸ்தானை போர் முனையில் சந்திக்க தயார் என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் அதிரடி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய ராணுவம் எதற்கும் தயாராக இருக்கிறது. பாகிஸ்தானுடன் போர் வந்தாலும், சீனாவுடன் போர் வந்தாலும் ராணுவம் சமாளிக்கும்.

அதே நேரத்தில் இரண்டு நாடுகளுடன் ஒரே நேரத்தில் போர் வந்தாலும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராகவே உள்ளது. ஒரே நேரத்தில் இரு நாட்டுடன் போர் வந்தால், உள்நாட்டு பாதுகாப்பையும் உறுதி செய்யும் வலிமை இந்திய ராணுவத்திடம் உள்ளது. இவ்வாறு பிபின் ராவத் கூறியுள்ளார்.