டிடிவி.தினகரன் சிறை செல்வது உறுதி – ஈவிகேஎஸ் பரபரப்புத் தகவல்

ராஜபாளையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 3,500 விலையாக உயர்த்த வேண்டும். மாட்டிறைச்சி விவகாரத்தில் பாஜக அரசு தனது நிலைபாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மீதான தாக்குதல் மிருகத்தனமானது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக அரசுக்கு வரும் 14ஆம்தேதி சட்டசபை கூட்டத்தொடரே கடைசி கூட்டமாக இருக்கும். இரட்டை இலை விவகாரத்தில் டிடிவி.தினகரன் நிரந்தரமாக சிறை செல்வது உறுதி என கூறினார்.