துரோகத்தின் பின்னணியில் இருப்பது ஓபிஎஸ், ஈ.பி.எஸ் தான் – டிடிவி தினகரன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நடைபெறும் தகவல் கிடைத்தவுடன் தொண்டர்கள் அங்கு குவியத் துவங்கி விட்டனர். போயஸ் கார்டன் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது பற்றி டிடிவி தினகரன் மிகவும் காட்டமாக பேசியுள்ளார். “போயஸ் கார்டனில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதற்கு காரணம் எதுவாக இருந்தாலும், இது அம்மாவின் ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகம். இந்த துரோகத்தின் பின்னணியில் எடப்பாடியும் பன்னீர்செல்வமும்தான் இருக்கிறார்கள்” என்றார் தினகரன்.