ஸ்டாலின், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.  சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள ரங்கபாஷ்யம் தெருவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின், சைதாப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியன், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் தன்னார்வலர்கள் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின், அங்கு மரக்கன்றை நட்டு வைத்தார்.

பின்னர் சைதாப்பேட்டை தொகுதி மக்களுக்கு ஸ்டாலின் மரக்கன்றுகளை வழங்கினார். நிகழ்ச்சியின் போது பேசிய ஸ்டாலின், தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று தெரிவித்தார். திமுக தான் ஆட்சியில் உள்ளது என்று மக்கள் நினைப்பதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.