ரஜினி, கமல் முரசொலி பவள விழாவில் பங்கேற்பு

ஆகஸ்ட் 8 தேதி முரசொலி பவள விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் ஆகியோர் பங்கேற்கின்றனர். நடிகர் கமல் சிறப்பு விருத்தினராகவும், நடிகர் ரஜினி பார்வையாளராக கலந்து கொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் சொல்லப்படுகிறது. திமுகவின் விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் பங்குபெறுகிறார்கள் என்றாலும், சமீபகாலமாகவே ரஜினியும், கமலும் தமிழக அரசியலில் நடைபெறும் நிகழ்வுகளை விமர்சனம் செய்துவரும் சூழலில் திமுக விழாவில் இவர்கள் பங்குபெறுவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தப்பட்டுளள்து. மேலும் இவ்விழாவில் திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள், மற்றும் தேசிய அளவில் உள்ள தலைவர்கள் பங்குபெறுவார்கள் என்ற தகவல்கள் வந்துள்ளன.