நீட் தேர்வை கண்டித்து 27ஆம் தேதி திமுக சார்பில் மனித சங்கிலி போரட்டம்

திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் வருகின்ற 27ஆம் தேதி மாலை 4 மணியளவில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் மாவட்டசெயலாளர்கள் கூட்டத்தில் நீட்தேர்வானது சமூக நீதிக்கு எதிரானது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதில் 27ஆம் தேதி கோவையில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்குபெறுவார் என்று சொல்லப்படுகிறது. மேலும் திமுகவின் மூத்த நிர்வாகிகளான பேராசிரியர் அன்பழகன், துரைமுருகன், மற்றும் கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் எந்த எந்த மாவட்டத்தில் மனித சங்கிலி போராட்டத்தில் பங்குபெறுவார்கள் என்ற அறிவிப்பினை சற்று நேரத்தில் திமுக சார்பில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.