கோவில்பட்டி அருகே கூலி தொழிலாளி கல்லால் அடித்து கொலை, ஒருவர் கைது

கோவில்பட்டி கழுகுமலை அருகேயுள்ள சுப்பிரமணியபுரம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ஜெயராம்(36) இவர் கொத்தனராக பணிபுரிந்து வருகிறது. இவரது வீட்டின் அருகேயுள்ளவர் போத்திராஜ் என்பவரது மகன் குருமூர்த்தி(37) இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இன்று அதிகாலையில் குருமூர்த்தி, ஜெயராம் வீட்டின் முன்பு நின்று பிரச்சினை செய்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஜெயராம், குருமூர்த்தி தாக்கியது மட்டுமின்றி, அருகில் இருந்த கற்களால் அடித்து படுகொலை செய்தாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் கிடைத்தும் கழுகுமலை போலீசார் விரைந்து சென்று குருமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் ஜெயராமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.