இத்தாலி, டென்மார்க், பெல்ஜியம் நாடுகளுக்கான புதிய இந்திய தூதர்கள் நியமனம்

இத்தாலி, டென்மார்க், பெல்ஜியம் நாடுகளுக்கான புதிய இந்திய தூதர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. இத்தாலி நாட்டிற்கான இந்திய தூதராக 1989ஆம் ஆண்டு ஐ.எஃப்.எஸ் பிரிவு அதிகாரியான ரீனட் சாந்து, டென்மாக் நாட்டிற்கான இந்திய தூதராக 1991ஆம் ஆண்டு ஐ.எஃப்.எஸ் பிரிவு அதிகாரியான அஜித் வி குப்தே, பெல்ஜியம் நாட்டிற்கான இந்திய தூதராக 1986ஆம் ஆண்டு ஐ.எஃப்.எஸ் பிரிவு அதிகாரியான கைட்ரி இசார் குமார் ஆகியோரை இன்று நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.