பேரவையில் அவை காவலர்களால் ஸ்டாலின் வெளியேற்றம்

சட்டபேரவையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியேற்றப்பட்டுள்ளார். திமுக சார்பில் சரவணன்,எம்,எல்,ஏ., பேசியதாக வெளிவந்துள்ள வீடியோ குறித்து கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கையை சபாநாயகர் மறுத்ததால், திமுக எம்,எல்,ஏ.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் திமுக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டதன் பேரில் அவை காவலர்களால் அனைவரும் வெளியேற்றபட்டனர். பேரவையில் இருந்து வெளியே வந்த ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டசபையின் வெளியே உள்ள ராஜாஜி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.