என் தோழிகளுக்கு திருமணமாகி விட்டது – கீர்த்தி சுரேஷ்

ரசிகர்களின் மனதில் சீக்கிரம் இடம் பிடித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். தற்போது சூர்யா, விக்ரமுடன் நடித்து வருகிறார். மிகவும் பிசியான இவர் ஐதராபாத் விமான நிலையத்தில் பேட்டி கொடுத்துள்ளார். 

தமிழில் இவ்வளவு பெரிய இடம் கிடைக்கும் என நினைக்கவில்லை. முன்னணி நடிகர்கள் தான் இந்த உயரத்தில் என்னை நிற்கவைத்து விட்டார்கள். அந்த வகையில் நான் அதிர்ஷ்டக்காரி. படத்தில் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். எனக்கு வரும் வாய்ப்பை நான் விட்டுவிடாமல் பிடித்து வருகிறேன்.

நேரம் கிடைக்கும் போது அப்பா, அம்மா, அக்கா என எல்லோரும் கோவிலுக்கு போவோம். என் தோழிகளுக்கு திருமணமாகி குழந்தை பிறந்துவிட்டது என கூறினார். எல்லோருடனும் நடித்து விட்டீர்கள் அடுத்து அஜித்துடன் தானா என கேட்டபோது தெரியவில்லை. நடக்கும் போது பார்த்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.