இஸ்ரேல் பிரதமர் மோடிக்கு வழங்கிய நினைவு பரிசு

அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் நரேத்திரமோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு இரண்டாம் உலகப்போரின் போது கொல்லப்பட்ட 60 லட்சம் யூதர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள யாத் வாஷெம் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி ‌செலுத்தினார். இந்தியாவில் 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டில் யூதர்கள் வாழ்ந்ததற்கு சான்றாக பொறிக்கப்பட்டுள்ள வரலாற்று நினைவு தாமிர தகடுகளை பிரதமர் நரேந்திர மோடிக்கு நினைவு பரிசாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யா வழங்கினார்.