கோவில்பட்டியில் மழைநீர் வடிகால் சுத்தப்படுத்தும் பணிகள் தொடக்கம்

கோவில்பட்டி நகராட்சியில் 36வார்டுகள் உள்ளன. பருவமழை விரைவில் தொடங்க உள்ளதால் 36 வார்டுகளில் உள்ள மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்களில் மழைநீர் தேக்கமடைந்து சாலைகளுக்குகோ அல்லது குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று விடமால் தடுக்கும் பொருட்டு அவற்றினை சுத்தப்படுத்தும் பணிகளை நகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. பணிகளை நகராட்சி ஆணையர் முருகேசன் தொடங்கி வைத்து மேற்பார்வையிட்டார். முதற்க்கட்டமாக கோவில்பட்டி மாதங்கோவில் ரோடு, புதுரோடு பகுதிகளில் நகராட்சி துப்புரவு பணியாளாய்கள் மழைநீர் வடிகாலை சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.தொடர்ந்து 36 வார்டு பகுதிகளிலும் இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, மழைநீர் தேங்கமடையமால் சீராக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையர் முருகசேன் தெரிவித்தார்.