துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் ‘கேவியட்’ மனு தாக்கல்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  இரட்டை இலை சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்துள்ளார். 8 மாத காலத்திற்கு பிறகு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் நேற்று எடப்பாடி அணிக்கு அளிப்பதாக உத்தரவு அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் அணியினர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய போவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் தற்போது ‘கேவியட்’ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தங்களிடம் கேட்காமல் இரட்டை இலை சின்னம் தொடர்பான எந்த வழக்கிலும் புது உத்தரவு பிறப்பிக்க கூடாது என்று ‘கேவியட்’ மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.