ஈபிஎஸ் – ஓபிஎஸ் மெரினாவில் அஞ்சலி

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வந்த வழக்கில் இன்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி – துணை முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர் சந்திப்பை அழைத்து, முதல்வரும் துணை முதல்வரும் பேட்டியளித்தனர். பின்னர், தமிழக அமைச்சர்களுடன் மெரினா கடற்கரைக்கு சென்ற அவர்கள், எம்.ஜி.ஆர், அண்ணா, மற்றும் ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் சமாதியில் மரியாதை செலுத்தினர்.