3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும்

3 நாட்களுக்கு நாளை முதல் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். நாளையில் இருந்து காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.