டி.டி.வி.தினகரன் மீது குற்றசாட்டு பதிவு

அந்நிய செலவாணி மோசடி வழக்கில் இன்று எழும்பூர் பொருளாதார நீதிமன்றத்தில் ஆஜரான டி.டி.வி.தினகரன் மீது குற்றசாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றசாட்டு முற்றிலும் தவறானது என்று டி.டி.வி.தினகரன் மறுத்துள்ளார்.

வழக்கு விசாரணையை 22 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி மலர்மதி உத்தரவிட்டுள்ளார். ஓரிரு நாட்களுக்கு முன்புதான் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட வழக்கில் இருந்து தினகரன் ஜாமினில் வெளிவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.