தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசிக்கு வாய்ப்பில்லை

தமிழக உணவு துறை அமைச்சர் காமராஜ் அளித்த பேட்டியில் தமிழகத்தில் அரிசியில் கலப்படம் இல்லை என்றும், பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் தரமான அரிசி கொடுப்பதால் இங்கு பிளாஸ்டிக் அரிசிக்கு வாய்ப்பில்லை என்றும் பிளாஸ்டிக் அரிசி பற்றி புகார் அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். பிளாஸ்டிக் அரிசி கலக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.