அமெரிக்க சைபர் பிரிவில் இருந்து 7 பேர் ராஜினாமா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் இணைய பாதுகாப்பு குழுவில் இருந்த 7 பேர் ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு ராஜினாமா செய்தவர்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு இணைய பாதுகாப்பு விவகாரங்களில் ஆலோசனை அளித்து வந்தனர். இந்நிலையில்,தேச பாதுகாப்பு விவகாரங்களில் டொனால்டு டிரம்ப் அலட்சியமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி இந்திய வம்சாவளியை சேர்ந்த இணைய விஞ்ஞானி டி.ஜெ.பட்டீல் உட்பட 7 பேர் தமது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

இந்த 7 பேரும் கூட்டாக எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில்,இணைய பாதுகாப்புக்கு எழுந்துள்ள அச்சுறுத்தல் குறித்து போதிய அக்கறை செலுத்தவில்லை என்றும், இனவெறி குழுக்களின் வன்முறையைக் கண்டிக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.