சிபிஐ கார்த்தி சிதம்பரத்திடம் மீண்டும் விசாரணை

முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திடம் இன்று சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர். ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு வெளிநாடு முதலீட்டு ஆணையம் வழங்கிய ஒப்புதலில் நடந்த முறைகேடு தொடர்பாக, ஏற்கனவே சில தினங்களுக்கு முன் அவரை விசாரித்த நிலையில், இன்று காலை 11.30 மணியளவில் அவரை மீண்டும் அழைத்திருந்தனர்.  பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி முகர்ஜி நடத்தி வந்த ஐ.என்.எக்ஸ் நிறுவனம், கார்த்தி நிர்வகிக்கும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு பெரிய தொகை ஒன்றை அளித்ததாக சிபிஐ வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி, தற்போது ஒரு கொலை வழக்கில் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.