வரும் 19-இல் படகுகளை ஒப்படைக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் உண்ணாவிரதம்

boatஇலங்கை சிறையிலுள்ள 13 தமிழக மீனவர்களையும், 95 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் வருகிற 19-ஆம் தேதி தங்கச்சிமடம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
ராமேசுவரம் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து இந்த மாதம் மீன்பிடிக்கச் சென்று, இலங்கை கடற்படையினரால் 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், இலங்கை கடற்படை வசமுள்ள தமிழக மீனவர்களின் 3 நாட்டுப் படகு உள்பட 95 விசைப்படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் வருகிற 19-ஆம் தேதி தங்கச்சிமடம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர்