சென்னையில் முதல்கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார் வைகோ

vaikoமறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ வருகிற 16 ஆம் தேதி சென்னையிலிருந்து தனது முதல் கட்ட பிரசாரத்தைத் தொடக்குகிறார். இதுதொடர்பாக மதிமுக வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது;தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி- தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளருமான வைகோ சனிக்கிழமை (ஏப். 16) காலை 10.00 மணிக்கு, சென்னை அண்ணா நகர் -எம்.ஜி.ஆர். காலனியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்துப் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.இதைத்தொடர்ந்து ஏப்ரல் 26 ஆம் தேதி வரை தமிழக முழுவதும் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். அதன் விவரம்:ஏப்ரல் 16: அண்ணா நகர், வில்லிவாக்கம், கொளத்தூர், பெரம்பூர், திரு வி.க.நகர், ஆயிரம் விளக்கு, துறைமுகம், ஆர்.கே. நகர்

ஏப்ரல் 17: ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, திருமங்கலம், மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், மதுரை தெற்கு
ஏப்ரல் 18: விளவன்கோடு, கிள்ளியூர், குளச்சல், பத்மநாபபுரம், நாகர்கோவில், கன்னியாகுமரி
ஏப்ரல் 19: சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை
ஏப்ரல் 20: விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், ஸ்ரீ வைகுண்டம், திருச்செந்தூர், தூத்துக்குடி
ஏப்ரல் 21: இராசபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர்
ஏப்ரல் 22: சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி, அறந்தாங்கி, ஆலங்குடி
ஏப்ரல் 23: ஜெயங்கொண்டம், அரியலூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், திருச்சி கிழக்கு
ஏப்ரல் 24: அரவக்குறிச்சி, தாராபுரம், பல்லடம், கிணத்துக்கடவு
ஏப்ரல் 25: கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, சிங்காநல்லூர், சூலூர், அவினாசி, பெருந்துறை, ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு
ஏப்ரல் 26: உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், மயிலம், திண்டிவனம், செஞ்சி