டென்னிஸ் பயிற்சியாளர் தூக்குப்போட்டு தற்கொலை வறுமை வாட்டியதால் விபரீத முடிவெடுத்த வீரர்

vtv_logoவருமானம் இல்லாததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த டென்னிஸ் பயிற்சியாளர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் மணிகண்டன் . இவர் வளசரவாக்கத்தில் உள்ள டென்னிஸ் பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார்.ஆனால் கடந்த சில மாதங்களாக வருமானம் இல்லாததால் அவர் மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.போதிய வருமானம் இல்லாத நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த மணிகண்டன் நேற்று முன்தினம் அவருடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுபற்றிய தகவல் கிடைத்து வந்த எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.* சமீபத்தில் குடிபோதையில் தீக்குளித்ததில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அமைந்தகரையை சேர்ந்த தொழிலாளியான அமுல்ராஜ்(30) நேற்று இறந்தார்.