செம்மரம் கடத்த முயன்றதாக 65 தமிழர்கள் கைது

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள பாக்ராப்பேட்டையில் 10 பேரும், கடப்பாவில் 55 பேரும் செம்மரம் கடத்த முயன்றதாக செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் வேலூர் மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியைச் சார்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.7 கோடி மதிப்பிலான செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் பதுங்கியுள்ளனர் என்றும், தேடுதல் வேட்டை தொடர்வதால் கைது எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.