ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் மாதம் 12-ம் தேதி இடைத்தேர்தல்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் மாதம் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல்கள் மார்ச் 23-ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற மார்ச் 27-ம் தேதி கடைசி நாள். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 24-ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் மாதம் 15-ம் தேதி நடைபெறுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் யாருமின்றி காலியாக உள்ளது.