புதிய 10 ரூபாய் நோட்டு விரைவில் அறிமுகம்

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களோடு புதிய 10 ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.புதிய ரூபாய் நோட்டில் ஆளுநர் உர்ஜித் பட்டேலின் கையெழுத்து இருக்கும்.நோட்டு அச்சடிக்கப்படும் 2017-ம் ஆண்டு, ரூபாய் நோட்டின் பின்னால் இருக்கும். மற்ற அம்சங்களோடு, ரூபாய் நோட்டின் மேலும் கீழும் உள்ள எண் வரிசையில், எண்கள் இடது புறத்தில் இருந்து வலப்பக்கமாய் ஏறுவரிசையில் அமைந்திருக்கும்.முதல் மூன்று எண் எழுத்துக்களின் (ஆல்ஃபா- நியூமரிக்) அளவில் எந்த மாற்றமும் இருக்காது.அதே நேரத்தில் இதற்கு முன்பு அச்சடிக்கப்பட்ட 10 ரூபாய் நோட்டுகளும் செல்லும் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.