மத்திய அமைச்சர்களை தமிழகத்தின் நலனுக்காகவே சந்தித்தோம் – தம்பிதுரை

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தம்பிதுரை தலைமையில் தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி மற்றும் மைத்ரேயன் ஆகியோர் சந்தித்து பேசினர் அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை கூறுகையில், தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி குறித்து மத்திய நிதி அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தோம். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை மரியாதை நிமித்தமாகவே சந்தித்துள்ளோம். அதிமுகவில் பிளவு இல்லை கருத்து வேறுபாடுகள் கலையபடும் இரட்டை இலை சின்னம் அதிமுகாவின் சின்னமாகும். விரைவில் சின்னத்தை மீட்டெடுப்போம் என்று கூறினார்