அன்பு செழியனுக்கு வெற்றி மாறன் ஆதரவு

கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார் அசோக்குமார். இதற்கு காரணம் என்று சொல்லபடுகின்ற அன்பு செழியனுக்கு பல பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், சிலர் அவருக்கு ஆதரவையும் அளித்து வருகின்றனர். இந்நிலையில், வெற்றிமாறன் அன்பு செழியனுக்கு ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார்.

‘நான் எனது இருபடங்களுக்கு அவரிடம் பணம் வாங்கியுள்ளேன். அவர் நல்ல விதத்தில் தான் என்னிடம் நடந்து கொண்டார். வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்த பின், உடனே போடப்பட்ட அக்ரீமெண்ட்டினை ரத்து செய்து என்னிடம் தந்து விடுவார்’ என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் அசோக்குமார் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். இவர் பேசிய வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோ பதிவு கீழே

[wpdevart_youtube]WwTsjKzPRcI[/wpdevart_youtube]