அன்பு செழியன் மீது லுக் அவுட் நோட்டீஸ்

நடிகர் சசிகுமாரின் உறவினரும், இணை தயாரிப்பாளருமான அசோக்குமார் கந்துவட்டி கொடுமையால் கடந்த 21ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் அவரது சடலத்தோடு ஒரு கடிதம் எழுதப்பட்டிருந்தது, அதன் மூலம் அவர் கந்து வட்டி பிரச்சனையால் தான் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவந்தது.

இதனையடுத்து அன்புச்செழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தனிப்படை அமைத்து காவல்துறையினர் அன்புச்செழியனை தேடி வருகின்றனர். இந்நிலையில் அந்த பைனான்சியர் அன்பு செழியன், வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க விமானநிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளது காவல்துறை.