அமைச்சர் உதயகுமார் ஒரு பச்சோந்தி – வெற்றிவேல் எம்,எல்,ஏ. குற்றசாட்டு

அதிமுக அம்மா அணியின் டி.டி.வி.தினகரனுடைய ஆதரவு எம்.எல்,ஏ.வான வெற்றிவேல் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், சிலரது நிர்பந்தத்திற்கு பயந்துதான் பதவி கொடுத்தவர்கள் வேண்டாம் என்று மாற்றி பேசுகிறார்கள். இன்று கூட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார், இவர் தான் முதன் முதலில் சட்ட பேரவைக்கு அம்மா அவர்கள் இருப்பதினால் செருப்பு போடமாட்டேன் என்றும், பிறகு விசுவாசத்திற்கு நம்பிக்கையானவர் ஓ.பி.எஸ்.என்றும், அதை தொடர்ந்து கழகத்தின் பொதுசெயலாளராக சின்னம்மா அவர்கள் தான் வரவேண்டும் மேலும் தமிழக முதல்வராக சின்னம்மா பதவிஏற்கவேண்டும் என்று தீர்மானம் போட்டவரும் இவர்தான்.

இப்படித்தான் நாக்குக்கு நரம்பு இல்லை என்பதிற்காக என்ன வேண்டுமானாலும் பேசுபவர். நடிகர் திலகத்தையே மிஞ்சியவர். இவர் ஒரு பச்சோந்தி என்று அமைச்சர் உதயகுமார் மீது குற்றசாட்டுகளை முன்வைத்த வெற்றிவேல் எம்,எல்,ஏ., மேலும் பேசுகையில், அதிமுகவின் சாமானியருக்கு பதவி வழங்கப்பட்டும் என்பதுதான் கொள்கை டி.டி.வி.தினகரனுக்கு அதிகாரமில்லை என்று யாரும் சொல்ல அதிகாரமில்லை. தினகரனை எதிர்ப்பவர்கள் உடனடியாக பதவி விலகவேண்டும்.கட்சி விரோத நடவடிக்கையில் நாங்கள் ஈடுபடவில்லை.முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூண்டுதலில் பெயரில் தான் அமைச்சர்கள் பேசுகிறார்கள் என்பது ஏற்புடையது அல்ல என்று கூறினார்.