தோர் : ரக்னராக் திரைவிமர்சனம்

தோரின் உலகமான ஆஸ்கார்டில் தன்னுடைய அப்பா உருவத்தில் இருக்கும் லோகி சந்திக்கிறார். இவன் தந்தை இல்லை என்பதை அறிந்து அவருடன் சேர்ந்து தன் அப்பாவை தேடி உலகிற்கு வருகிறார். அங்கு, தன்னுடன் வந்த லோகி, தன்னுடைய சகோதரர் என்பது அப்பா மூலம் தெரிந்துக் கொள்கிறார்.

இந்நிலையில், தோரின் அப்பா இறக்கிறார். மிகவும் சக்தி வாய்ந்த தோரின் சகோதரி ஹெலா, தோரின் ஆயுதமான சுத்தியலை சாதரணமாக உடைத்தெரிந்து, ஆஸ்கார்டை தன் வசப்படுத்தி, தோரையும், லோகியையும் வேற்று கிரகத்திற்கு அனுப்பி விடுகிறார். வேற்றுக் கிரகத்தில் சிக்கிக்கொள்ளும் தோர், எப்படி தன் சகோதரி ஹெலாவை வீழ்த்தி தன் உலகமான ஆஸ்கார்டை எப்படி மீட்டெடுக்கிறான் என்பதே தோர் : ரக்னராக் படத்தின் கதை.