திரி – திரைவிமர்சனம்

Vishal Kadhakkali Pongal release

கல்லூரியில் இறுதிஆண்டு படிக்கும் மாணவனாக வருகிறார் நாயகன் அஸ்வின். அஸ்வினின் அப்பாவான ஜெயப்பிரகாஷ் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஒழுக்கம் வாழ்க்கைக்கு முக்கியம். ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை பின்பற்ற வேண்டும் என்பது ஜெயப்பிரகாஷின் கொள்கை. அதன்படியே மகன் அஸ்வின் மற்றும் மகளை வளர்த்திருக்கிறார். அஸ்வின் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசித்து வரும் நாயகியான சுவாதி, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார்.

வெகு நாட்களாக இருவருக்கும் இடையே நட்பு இருந்து வந்தாலும், உள்மனதிற்குள் காதலும் இருக்கிறது. ஆனால் அந்த காதலை ஒருவொருக்கொருவர் வெளிப்படுத்தாமல் பழகி வருகின்றனர். இந்நிலையில், அஸ்வின் பைக்கில் செல்லும் போது எதிரே வந்த கார் ஒன்று அவர் மீது மோதி விடுகிறது. இதையடுத்து காரை விட்டு இறங்கிய அர்ஜய் தகாத வார்த்தைகளால் அஸ்வினை திட்ட, அஸ்வின் அவரை அடித்து விடுகிறார். இதையடுத்து அர்ஜயிடம் மன்னிப்பும் கேட்டுவிட்டு அந்த இடத்தில் இருந்து இருவரும் சென்றுவிடுகின்றனர். இதையடுத்து தனது இறுதிஆண்டு கல்லூரி படிப்பை முடித்த அஸ்வினின் சான்றிதழில் அவரது ஒழுக்கத்திற்கு குறை இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது.

கல்லூரியில் எந்த பிரச்சனையிலும் சிக்காத அஸ்வின், இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தில் முறையிடுகிறார். அப்போது தான் கல்லூரியின் தலைவரான ஏ.எல்.அழகப்பனின் மகன் தான் அர்ஜய் என்பது தெரிய வருகிறது. அஸ்வினை பழிவாங்குவதற்கான நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்த அர்ஜய், அஸ்வினின் அப்பாவுக்கு முக்கியமாக கருதப்படும் ஒழுக்கத்தின் மூலமாக பழிவாங்கி விடுகிறார். தனது தந்தைக்கு தெரியாமல் எப்படியாவது இந்த சான்றிதழை மாற்றிவிட வேண்டும் என்று முயற்சி செய்கிறார். அதற்காக ஏ.எல்.அழகப்பனை சந்திக்கிறார். அரசியல், கட்டப்பஞ்சாயத்து என பல தொழில்களில் ஈடுபட்டு வரும் அழகப்பன் தேர்தலை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

இந்நிலையில், அவரை சந்திக்க வரும் அஸ்வினை தனது ஆட்களை வைத்து சரமாரியாக அடித்து விடுகிறார். இதனால் கோபமடையும் அஸ்வின், இதற்கு காரணமான அர்ஜயை பழிவாங்க முடிவு செய்கிறார். மேலும் தனது சான்றிதழில் தனது ஒழுக்கத்திற்கு எதிராக ஏற்பட்ட கரையை துடைக்க வேண்டும் என்றும் முடிவு செய்கிறார். அழகப்பனின் அரசியல் கனவையும் தகர்க்க முடிவு செய்யும் அஸ்வின் முன்னெடுக்கும் போராட்டமே படத்தின் மீதிக்கதை.

இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்