கோவில்பட்டியில் தனியார் கேஸ் அலுவலகம் மற்றும் கோவிலில் திருட்டு

கோவில்பட்டி சாத்தூர் சாலையில் கருப்பசாமி கோவில் உள்ளது. இன்று காலையில் கோவில் பூசாரி கோவிலுக்கு சென்ற போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடு போனது தெரியவந்தது, இதனை தொடர்ந்து அவர் கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தினை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இதேப்போன்று கோவில்பட்டி பழைய மேற்கு காவல்நிலையம் அருகே கணேசன் என்பவருக்கு சொந்தமான தனியார் கேஸ் நிறுவன அலுவலகம் உள்ளது. இன்று காலையில் கணேசன் அலுவலகத்திற்கு சென்ற போது, அலுவலகத்தின ஓடு பிரிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அலுவலக பீரோவில் வைக்கப்பட்டு இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் கம்ப்யூட்டர் மானிட்டர் ஆகியவை திருடு போனது தெரியவந்து. இது குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.