ஓட்டுநர் உரிமத்தினை பறிக்கும் சட்டத்தினை வாபஸ் பெறகோரிக்கை

ஓட்டுநர் உரிமத்தினை பறிக்கும் 6 மாத தண்டனையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும், டாடா ஏசி மற்றும் வேன்களில் ஆடு,மாடு கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும், கட்டிட தொழில் செய்யும் தொழிலாளர்கள் உபகரணங்களை வாகனங்களில் கொண்டு செல்லும் போது அதனை பாதுகாக்கும் பொருட்டு லோடு மேன்கள் உட்கார அனுமதிக்க வேண்டும், விவசாயம் சார்ந்த பொருள்கள் கொண்டும் செல்லும் போது பாதுகாக்க அவர்களை அனுமதிக்க வேண்டும், காவல்துறையினரால் விதிக்கப்படும் அபராதத் தொகை நியாயமானதாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அனைத்து ஆட்டோ மற்றும் வேன் ஓட்டுநர் நலச்சங்கத்தினர் தங்களது வாகனங்களுடன் அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணை செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் கோவில்பட்டி டி.எஸ்.பி. அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு மனு அளித்தனர்.