பிச்சை எடுத்த ரஷ்ய இளைஞர், மீட்டு உதவி செய்த காவல் உதவி ஆய்வாளர்

 
காஞ்சிபுரம் கோயில் ஒன்றில் ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் பிச்சை எடுத்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு, உதவி செய்தனர். 
 
ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் பிச்சை  எடுத்ததை கேள்விப்பட்ட சிவகாஞ்சி காவல் உதவி ஆய்வாளர் துளசி அங்கு வந்தார். அவரை மீட்டுவந்து காவல் நிலையத்தில் விசாரணை செய்தபோது, ரஷ்யாவில் இருந்து இந்தியா வந்துள்ளதாகவும், ஏ.டி.எம் கார்டு லாக் ஆகிவிட்டதால் பிச்சை எடுத்ததாகவும் கூறி இருக்கிறார். பின்பு அந்த உதவி ஆய்வாளர் செலவுக்கு 500 கொடுத்து காஞ்சிபுரத்தில் உள்ள ரயிலில் சென்னைக்கு ஏற்றி அனுப்பி இருக்கிறார்.