கன்னட அமைப்பினர் பெங்களுரில் தமிழ் பேனர்களை கிழித்து போராட்டம்

தமிழில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை பெங்களூரில் கன்னட அமைப்பினர் கிழித்து எறிந்தனர். பெங்களூர் புலிகேசி நகரில் சுதந்திர தினம், மற்றும் ஆடிக்கிருத்திகைக்காக வைக்கப்பட்டிருந்த தமிழ் பேனர்களை கன்னட அமைப்பினரால் கிழித்து எறியப்பட்டுள்ளது. இந்திக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னட ரக்ஷின வேதிகே கன்னட அமைப்பு தற்போது தமிழ் மொழிக்கும் எதிர்ப்பு தெரிவித்து தமிழ்பேனர்களை கிழித்து வருகிறது.

மொழித்திணிப்பு சட்ட விரோதம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று கூறிய நிலையில் இன்று தமிழ் பேனர்களை கிழிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.