திமுக என்றும் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் – மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்டவேண்டும் என்று திமுக பலமுறை வலியுறுத்தி வந்த நிலையில் சட்டசபை பேரவை கூட்டத்தொடர் தற்போது கூட்டப்படுவது வரவேற்கத்தக்கது. ஆர்.கே.நகர் தேர்தல் நிறுத்தப்பட்டபோதே சட்டசபையை கூட்டிருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் ஸ்டாலின் கூறுகையில், அதிமுகவில் இருக்கும் சூழலில் சட்டபேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுமா என்று சந்தேகம் உள்ளது. சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனைகளுக்கு திமுக என்றும் குரல் கொடுக்கும். அதிமுக அரசு அகற்றப்பட வேண்டும் என்பதே மக்கள் எதிர்பாக்கிறார்கள் என்று கூறினார்.

The DMK also calls for people's problems - MK Stalin