மழையால் உயிர்இழந்த மாணவன் குடும்பத்திற்கு நிதிஉதவி முதல்வர்

NEE Short Film

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை வட்டம், ஆனைமலைக் குன்றுகள் கிராமம், வால்பாறை நகராட்சிக்கு சொந்தமான அண்ணா திடல், வால்பாறை – பொள்ளாச்சி பிரதான சாலையில் மழையின் காரணமாக, பழமையான மரம் சாய்ந்து விழுந்ததில், பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த, வால்பாறையைச் சேர்ந்த திரு. ஸ்ரீதரன் என்பவரின் மகன் செல்வன் சிவராமன் என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

மரம் விழுந்து உயிரிழந்த செல்வன் சிவராமன் என்பவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்த செல்வன் சிவராமன் குடும்பத்திற்கு நான்கு லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.