நீதிமன்றம் திடீர் பிடிவாரண்ட் நடிகர் ஜெய்க்கு

சில நாட்களுக்கு முன் நடிகர் ஜெய் குடித்துவிட்டு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய விஷயம் அனைவருக்கும் தெரியும். மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் ஜெய்க்கு பிடிவாரண்ட். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நீதிபதி ஆப்ரகாம் லிங்கன் இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நடிகர் ஜெய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்து நடிகர் நிதின் சத்யா தயாரிக்க இருக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.