கோவில்பட்டியில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் தொடக்கம்

 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் 16 வயதுக்குட்பட்ட வீரர்கள் பங்கு பெரும் பி. ஆர் தேவர்கப்பைக்கான மாவட்ட அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் மாநிலத்தின் பல்வேறுபகுதிகளில் இன்று தொடங்கியது. தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் இதன் பி பிரிவுபோட்டிகள் கோவில்பட்டி நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் கே.ஆர் ஆர்ட்ஸ் கல்லூரி மைதானங்களில் இன்று தொடங்கியது. இந்த பிரிவில் தூத்துக்குடி ,சேலம் ,விழுப்புரம் ,மற்றும் பாண்டிச்சேரி அணிகள் பங்கு பெறுகின்றன . இந்த போட்டிகளை நேஷனல் பொறியியல் கல்லூரி சேர்மன் டாக்டர் ,சொக்கலிங்கம் அவர்கள் தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சிவகுமாரன் ,இணை செயலாளர் கிறிஸ்ப்பின், செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ் பிராங்கிளின் , கோவில்பட்டி பகுதி பொறுப்பாளர் விஜய்ஆனந்த் , தயாகர் ,ராம்குமார் சீனிராஜ்  உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் .முதல் நாள் போட்டிகளில் தூத்துக்குடி மாவட்ட அணி பாண்டிச்சேரி அணியுடனும் விழுப்புரம் மாவட்ட அணி சேலம் அணியுடனும் மோதி வருகின்றனர். போட்டிகள் வரும் ஞாயிற்று கிழமை வரை நடைபெரும் .இந்த சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் .