பக்ரீத் பண்டிகையை ஒட்டி சிறப்பு தொழுகைகள்

 பக்ரீத்  பண்டிகையை ஒட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் ரத்போரா மைதானத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர், மும்பையிலுள்ள மாஹிம் தர்காவில் தொழுகைகள் நடைபெற்றன. டெல்லியில் பிரமாண்டமான ஜாமா மஸ்ஜிதில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு தங்கள் அன்பையும் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டனர். பஞ்சா ஷரிஃப் தர்காவில் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோர் தொழுகையில் ஈடுபட்டனர்