குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை

 
 
வக்கிரகங்களில் மிகவும் நற்பலன்களை கொடுப்பவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியை கடந்து அடுத்த ராசிக்கு செல்கின்றார். இந்த ஆண்டு வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி இன்று கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கின்றார். இதனை முன்னிட்டு கோவில்பட்டி பூவனநாதசுவாமி – செண்பகவல்லியம்மன் திருக்கோவிலில் குருபெயர்ச்சி சிறப்பு யாக பூஜைக்கு கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதிகாலையில் கோவில் நடைதிறக்கப்பட்டு கணபதி பூஜை, சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து குருபகவானுக்கு சிறப்பு யாக பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.