மாணவி வளர்மதி வழக்கில் சேலம் மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு

கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவி வளர்மதி ஜூலை மாதம் 12ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்பு மாணவிமீது 17ஆம் தேதி குண்டர் சட்டம் பாய்ந்தது.

இதை எதிர்த்து மாணவியின் தந்தை மாதயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசியல் காரணங்களுக்காக எனது மகள் வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதாக வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது சேலம் மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.