கண்களின் ஆரோக்கியத்திற்கு குங்குமப்பூ டீ

 

பார்வை பிரச்சனையை குங்குமப்பூ டீ போக்குகிறது. தற்போது கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் முன் உட்கார்ந்து நாள் முழுவதும் வேலை செய்கிறோம், அதுமட்டுமின்றி எந்நேரமும் மொபைலைப் பார்த்துக் கொண்டே இருப்பதால், பார்வை பிரச்சனை ஏற்பட்டு பலரும் கண்ணாடி அணிகின்றனர். கண்ணாடி அணிவது ஸ்டைலாக இருந்தாலும், தினமும் கண்ணாடி அணிபவர்களுக்குத் தான் அந்த கஷ்டம் தெரியும்.

அதுமட்டுமல்லாமல் தற்போதைய மோசமான உணவுப் பழக்கத்தால், உண்ணும் உணவுகளில் உடலுக்கு தேவையான சத்துக்கள் ஏதும் கிடைக்காமல், கண்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. ஆனால் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பார்வை பிரச்சனையைப் போக்க ஒரு பானம் உள்ளது. அது தான் குங்குமப்பூ டீ.

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதித்ததும், குங்குமப்பூவை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, குளிர வைத்து, தேன் கலந்தால், குங்குமப்பூ டீ தயார். குங்குமப்பூ டீயை ஒருவர் தினமும் பகல் வேளையில் ஒரு கப் குடித்து வந்தால், பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.

குங்குமப்பூ டீ பார்வையை மேம்படுத்துவதோடு, ஆர்த்ரிடிஸ் வலியை சரிசெய்யும், ட்ரைகிளிசரைடு அளவை சீராக வைத்துக் கொள்ளும் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். ஒருமுகப்படுத்தும் திறனை மேம்படுத்தும். உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.