சேமிப்பு கணக்கிலிருந்து வாரத்திற்கு அதிகபட்சம் ரூ.50,000 எடுக்கலாம் என ஆர்.பி.ஐ அறிவித்துள்ளது

சேமிப்பு கணக்கிலிருந்து வாரம் அதிகபட்சமாக ரூ.50,000 வரை எடுத்துக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி சலுகை வழங்கியுள்ளது. மார்ச் 13ஆம் தேதி முதல் இந்த சலுகை அமலுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகளில் இருந்து பணத்தை எடுக்க கடந்த வருடம் நவம்பர் 8ஆம் தேதி முதல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதன்பிறகு, 2 கட்டங்களில் பணத்தை எடுக்கும் நடைமுறை தளர்த்தப்பட்டது. ஆர்.பி.ஐ தற்போது ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்களை அதிக அளவில் புழக்கத்திற்கு கொண்டு வந்ததால் ரூபாய் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.